For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மேகாலயாவில் கிழக்கு காரோ குன்று பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 1.12 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 அலகுகளாக பதிவாகி உள்ளன.

மேகாலயாவின் கிழக்கு காரோ குன்றுப் பகுதியில், நேற்று பிற்பகல் 1.12 மணியளவில் மையம் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

tremor felt Meghalaya

அஸ்ஸாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் தெரியவரவில்லை. இதன் காரணமாக மேகாலயா, அஸ்ஸாம் மாநில எல்லைப்பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கின.

கடந்த 1897ஆம் ஆண்டு மேகாலயாவில் 8.7 ஆக ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமர் 1,600 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
A minor tremor measuring 5.4 on the Richter Scale occurred on Tuessday noon in the area of Meghalaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X