For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்கத்தில் இப்படி கள்ள ஓட்டு போடுறாங்க.. கண்டுக்க மாட்றீங்களே.. சீதாராம் யெச்சூரி புகார்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ளஓட்டு போடுவதாக சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்கம், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Trinamool congress workers involving violence and rigging in Kolkatta: Yechury

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ள ஓட்டு போட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

பாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்! பாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்!

டைமண்ட் ஹார்பர், டம்டம், வடக்கு கொல்கத்தா ஆகிய தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரியாக கள்ளஓட்டுகளை போடுவதாக யெச்சூரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ள ஓட்டு போட்டதை தேர்தல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார்.

English summary
CPM Senior leader Sitaram Yechury has accused Trinamool congress workers involving violence and rigging in Dum Dum and diamond harbour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X