டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பியின் நகை பறிப்பு
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியின் நகையை டெல்லியில் திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதில் பெண் எம்.பியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கூச் பீகார் தொகுதியின் பெண் எம்.பி ரேணுகா சின்ஹா. இவர் டெல்லியில் ஹெய்லி சாலையில் உள்ள பெங்கா பவனில் தங்கியுள்ளார். நேற்றிரவு பெங்காபவனில் இருந்து வெளியே வந்த போது சாலையில் வந்த திருடர்கள் சிலர் எம்.பியின் கழுத்தில் இருந்த நகைகளை பறித்துச் சென்றனர்.
இதில் எம்.பியின் கழுத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான பிரைன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் பெங்கா பவன் வாசலில் மொபைல் போலீஸ் வேன் அமைக்கப்பட்டுள்ளது.