திரிபுராவில் 14 வயது சிறுமி பலாத்காரம்: அகில் பாரத் விகாஸ் தலைவர் மனோஜ் கோஷ் கைது
திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
அகர்தலா: திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் மனோஜ் கோஷ் (வயது 58) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹோவாய் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்நெந்து சக்கரவர்த்தி கூறியதாவது:
தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் 2017-ம் ஆண்டு முதல் தம்மை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழிலதிபர் ஒருவர் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அச்சிறுமி மிரட்டப்பட்டிருக்கிறார். தற்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
இப்புகாரின் அடிப்படையில் 58 வயதான மனோஜ் கோஷ் என்ற தொழிலதிபரை கைது செய்திருக்கிறோம். இவ்வாறு கிருஷ்நெந்து சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதனிடையே கைது செய்ப்பட்ட மனோஜ் கோஷ் அகில் பாரத் அகண்ட விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் மனோஜ் கோஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி என்கிறது சிபிஎம்.
ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இதனை நிராகரித்திருக்கிறது. தங்களது இயக்கத்துக்கும் மனோஜ் கோஷூக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஸ்வ ஹிந்து பரிஷத் விளக்கம் அளித்துள்ளது.