மாணிக் சர்க்காருக்கு திரிபுராவில் இடமில்லையாம்... மிரட்டுகிறார் பாஜக அமைச்சர்!
திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் மேற்குவங்கம், கேரளா அல்லது பங்களாதேஷிற்கு செல்வதை விட வேறு வழியில்லை என்று பாஜக மிரட்டும் தொணியில் தெரிவித்துள்ளது.
Recommended Video
அகர்தலா : திரிபுராவில் தோல்வியை தழுவியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் மேற்குவங்கம், கேரளா அல்லது வங்கதேசத்தில் தஞ்சம் அடைவதை விட வேறு வழியில்லை என்று அஸ்ஸாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
மாணிக் சர்காரின் தேர்தல் பிரச்சாரம் குறித்து பதிலளித்த ஹிமந்தா பிஸ்வாஸ் "மாணிக் சர்க்காருக்கு மூன்றே வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று அவர் மேற்குவங்கத்திற்கு செல்ல வேண்டும் அங்கு சிபிஎம் கட்சிக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது.
அல்லது கேரளா மாநிலத்திற்குத் தான் மாணிக் சர்க்கார் செல்ல வேண்டும் அங்கு தான் சிபிஎம் ஆட்சியில் உள்ளது. அல்லது அருகில் உள்ள பங்களாதேஷிற்கு செல்ல வேண்டும்.
மாணிக் சர்காரின் தன்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போதே பிஸ்வாஸ் சர்மா, அரசு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டதாகவும், எல்லை தாண்டிய குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 69 வயது முதல்வரான மாணிக் சர்க்கார் திரிபுராவில் 1998 முதல் ஆட்சியில் இருக்கிறார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகவும் மாணிக் சர்க்கார் இருந்து வருகிறார்.