டெல்லியில் துருக்கி அதிபர் எர்டோகன்... இருதரப்பு வர்த்தக உறவில் ஏறுமுகம்!
இந்தியாவுக்கும் துருக்கி நாட்டுக்கும் இடையே நட்பு ரீதியிலான வர்த்தக உறவு முன்பைவிட தற்போது மேம்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
டெல்லி: இந்தியா - துருக்கி இடையில் நட்பு ரீதியிலான வர்த்தக உறவு மேம்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகன் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவருக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை எர்டோகன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்ததும் பல்வேறு முன்னேற்றங்கள் கண்டுள்ளோம். பொருளதாதரத்தில் பல்வேறு மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.
50 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அதிவேக ரயில் இயக்கம் என இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. துருக்கியுடன் இந்தியாவுக்கு நல்லுறவு நீடிக்கிறது. இரு நாடுகளுக்கிடையே பொருளாதார, வர்த்தக ரீதியிலான பல்வேறு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரு நாட்டு உறவு மிகவும் பலமாக இருக்கிறது.
இவ்வாறு மோடி கூறினார்.