டிடிவி தினகரனை விடுவிக்க உத்தரவு... பாஸ்போர்ட்டை சரிபார்க்கவும் டெல்லி கோர்ட் ஆணை
டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லகார்ஜுனாவை சிறையில் இருந்து விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லகார்ஜுனாவை சிறையில் இருந்து விடுவிக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிடிவி தினகரன் பாஸ்போர்ட்டை சரிபார்க்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.
டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லகார்ஜுனாவை சிறையில் இருந்து விடுவிக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணைத்தொகை செலுத்தப்பட்டதால் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் பாஸ்போர்ட்டை சரிபார்க்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை வழக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து தினகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
டெல்லி திகார் சிறை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் 35 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை ஜாமீனில் வெளிவருகிறார். அவர் உடனடியாக சென்னைக்கு வருவார் என்று கூறப்படுகிறது. தினகரனை வரவேற்க அதிமுக அம்மா அணியினர் தயாராகி வருகின்றனர்.