For Daily Alerts
Just In
ஆந்திர போலீஸ் வெறியாட்டத்தில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்களாம்!
சித்தூர்: ஆந்திர மாநிலப் போலீஸார் இன்று சித்தூர் மாவட்டத்தில் நடந்ததிய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை செம்மரக் கடத்தல் தடுப்புப் போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மொத்தம் 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் 11 பே்ர் ஸ்ரீனிவாச மங்காபுரத்திலும், 9 பேர் ஸ்ரீவாரி மெட்டு பகுதியிலும் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட 20 பேரில் 2 பேர் சர்வதேச கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் அவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவற்றை இதுவரை ஆந்திர போலீஸார் வெளியிடவில்லை.
Comments
English summary
Two out of the 20 killed in an encounter today were international red wood smugglers, an officer with the Red Sanders Anti Smuggling Task Force informed. Twenty red sandalwood smugglers were killed in an encounter with the RSASTF at 5 AM this morning. RSATF DIG informed Oneindia over phone that 20 smugglers had been killed and the hunt was on for more. He also informed that 11 were killed at Srinivasa Mangapuram while nine were shot down in Srivarimettu.