மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு
ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். உயிர்க்காக்கும் கருவிகள் மற்றும் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.