For Daily Alerts
Just In
கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனர் வீடு அருகே துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.
கொல்கத்தா நகரில் போலீஸ் கமிஷனர் வீடு அருகே நர்சரி பள்ளி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அந்த பள்ளி வளாகத்துக்குள் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து தகராறில் ஈடுபட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நர்சரி பள்ளி இடம் தொடர்பான தகராறில்தான் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Two persons were shot dead and another injured when unidentified assailant opened fire at a disputed property site in Short Street area of the Kolkata on today.
Story first published: Monday, November 11, 2013, 11:25 [IST]