மாப்பிள்ளைகள் என்ன இப்படி கருப்பா இருக்காங்க: திருமணத்தை நிறுத்திய 2 சகோதரிகள்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் மணமகன்கள் கருப்பாக இருந்ததால் சகோதரிகள் இருவர் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சிக்ராரா கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது சகோதரிகளுக்கு பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்பகுதியில் பிரபலமான சாமியாரின் அறிவுரையின்படி சிறுமிகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
மணமகன்கள் கருப்பாகவும் தங்களை விட வயது அதிகமாகவும் இருப்பதை சிறுமிகள் தெரிந்து கொண்டனர். ஒரு மாப்பிள்ளையின் வயது 25, மற்றொருவரின் வயது 30. இதையடுத்து அவர்கள் கருப்பாக இருப்பவர்களை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
அவர்களின் பெற்றோரும், ஊர் பஞ்சாயத்தினரும் கட்டாயப்படுத்தியும் அவர்கள் மசியவில்லை. சிறுமிகளின் உறவினர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
முன்னதாக இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மணமகனின் வீட்டில் கழிப்பறை இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.