உ.பி காவல்நிலையத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்- இரண்டு காவலர்கள் “சஸ்பென்ட்”!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸ்காரர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதாவூன் பகுதியில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று 14 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து இரண்டு போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரையடுத்து இரண்டு போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட பதாவூன் நகர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாலன் சிங் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்கா சுக்லா, "உத்தரப்பிரதேச காவல்நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. இந்த சம்பவத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.