For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவும் உபேர்: எப்படி தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சென்னை மக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே வந்து உபேர் நிறுவன டாக்சிகள் இன்று வாங்க உள்ளது பெங்களூர் மக்களே.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய உபேர் நிறுவனம் முன்வந்துள்ளது. சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளிக்க விரும்பும் பெங்களூர் மக்களின் வீடுகளுக்கு சென்று அந்த பொருட்களை பெற உள்ளது. இதற்காக உபேர் எந்த கட்டணமும் வசூலிக்கப் போவது இல்லை.

Uber comes forward to help Chennai people

இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை நீங்கள் உபேர் ஆப் மூலம் டாக்சியை உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உபேர் ஆப்பில் உள்ள uberAID ஆப்ஷனில் உள்ள ரெக்வெஸ்ட் பிக்கப்பை கிளிச் செய்ய வேண்டும்.

நீங்கள் கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை எடுத்துச் சென்று பிராக்டோ மையங்களில் அளிக்கும் உபேர். இந்த உதவியை உபேர் பிராக்டோ நிறுவனத்துடன் சேர்ந்து செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி செய்ய விரும்புபவர்கள் உபேர் ஆப்பை பயன்படுத்தவும். இது குறித்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிவிக்கவும்.

English summary
Uber has come forward to do its bit to help the people of flood affected Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X