பெண் பயணியை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்த உபேர் டிரைவர் கைது
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் பயணியின் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்த உபேர் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் வசித்து வருபவர் உமா ஷர்மா(25). டெல்லியை சேர்ந்த அவர் அண்மையில் ஹைதராபாத்தில் குடியேறியுள்ளார்.
கடந்த 19ம் தேதி அதிகாலை அவர் உபேர் டாக்சி மூலம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். டாக்சி ஆள் நடமாட்டமே இல்லாத ஓஆர்ஆர் ரோட்டை அடைந்ததும் டிரைவர் வாகனத்தின் வேகத்தை குறைத்துவிட்டு உமாவை கண்ணாடி வழியாக பார்த்துள்ளார்.
பின்னர் அவர் உமாவை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்துள்ளார். இதை பார்த்து உமா அலறிய பிறகே அவர் காரை நிறுத்தியுள்ளார். ஒரு வழியாக உமாவை அந்த டிரைவர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டார்.
டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் உமா போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே அந்த டிரைவரை பணிநீக்கம் செய்துவிட்டதாக உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.