For Daily Alerts
Just In
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு... 48 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலன் அடைவர். மேலும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பலன் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. அக்கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த உயர்வைச் சேர்த்து அகவிலைப்படி உயர்வானது 113 சதவீதத்திலிருந்து 119 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.
இந்த உயர்வால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பலன் அடைவர். அதேபோல 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பலன் கிடைக்கும்.
Comments
English summary
The Union Cabinet has approved additional dearness allowance, DA of 6% for central government employees. With this announcement the total DA will go upto 119% from 113% .
Story first published: Wednesday, September 9, 2015, 13:56 [IST]