பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு 5 மாதங்கள் முன்கூட்டியே பச்சைக்கொடி காட்டிய அரசு: ஆர்.டி.ஐ
மும்பை: புதியதாக வடிவமைக்கப்பட்ட ரூ.2000, 500 நோட்டுக்களை அறிமுகம் செய்யவும், பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கும் 5 மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்ததாம்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் மற்றும் பழைய நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியிடம், ஆர்டிஐ சட்டம் மூலம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, நவம்பர் 8 ம் தேதி பழைய ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்கு 2016 ம் ஆண்டு ஜூன் 7 ம் தேதியே மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது என தெரிவித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு மே 19 ம் தேதியே ரிசர்வ் வங்கி வடிவமைத்து விட்டதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.