பெரும் அதிர்ச்சியடைந்தேன்.. அனில் மாதவ் தவே குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானதையொட்டி அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானதையொட்டி அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரை அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் அனில் மாதவ் தவே. மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் ஆவார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அனில் மாதவ் தவே டெல்லியில் இன்று காலை திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
Absolutely shocked by the sudden demise of my friend & a very respected colleague, Environment Minister Anil Madhav Dave ji. My condolences.
— Narendra Modi (@narendramodi) May 18, 2017
அனில் மாதவ் தவே காலமானதையொட்டி பிரதமர் மோடி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நேற்று மாலை வரை அனில் மாதவ் தவேவுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
Anil Madhav Dave ji will be remembered as a devoted public servant. He was tremendously passionate towards conserving the environment.
— Narendra Modi (@narendramodi) May 18, 2017
தனது நண்பரும் உடன் பணிபுரிபவருமான அனில் மாதவ் தவேவின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை கவனிப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தவர் என்றும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
I was with Anil Madhav Dave ji till late last evening, discussing key policy issues. This demise is a personal loss.
— Narendra Modi (@narendramodi) May 18, 2017