ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கட்காரி, விகேசிங் பங்கேற்பு #VijayaDashami
Recommended Video
நாக்பூர்: நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கி வைக்கும் சம்பிரதாய நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. நெல்மணி, அரிசியில் ஏடு எழுதி குழந்தைகளுக்கு கல்வி தொடங்கி வைக்கப்பட்டது.
சில இடங்களில் தங்க எழுத்தாணி கொண்டு நாக்கில் கீறிவிடும் சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்றன. தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழக அரசின் அங்கன்வாடி பள்ளிகளில் 3-வது வயது நிறைந்த குழந்தைகளை இன்று விஜயதசமி நாளில் சேர்க்கலாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி அங்கன்வாடிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில்..
Maharashtra: RSS Chief Mohan Bhagwat, Maharashtra CM Devendra Fadnavis, Union Ministers Nitin Gadkari & General (retd.) VK Singh at an event organised by RSS in Nagpur on the occasion of #VijayaDashami. HCL founder Shiv Nadar is the chief guest at the event. pic.twitter.com/52NuwAkTC4
— ANI (@ANI) October 8, 2019
ஆண்டுதோறும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் நாக்பூரில் வெகுசிறப்பாக விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படும். இன்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
पू. सरसंघचालक डॉ. मोहनजी भागवत शस्त्र पूजन करते हुए #RSSVijayaDashami pic.twitter.com/WlUEhKQwDX
— RSS (@RSSorg) October 8, 2019
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, வி.கே.சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார்.