ஜீ பூம் பா... ஏடிஎம் மிஷினில் வரும் கொழுக்கட்டைகள்... இது கணேஷா ஸ்பெஷல்!
Recommended Video
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டு அதில் சிறப்பு கார்டை போட்டால் கொழுகட்டை வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தற்போது விநாயகரை விஜர்சனம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் தொழில்நுட்பத்தையும் நமது கலாசாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல புணேவில் சஞ்சீவ் குல்கர்ணி என்பவர் ஒரு முயற்சி எடுத்துள்ளார். அதாவது ஏடிஎம் மிஷினில் சிறப்பு கார்டை போட்டால் மோதகம் (கொழுக்கட்டை) வரும் வகையில் மிஷினை தயார் செய்தார்.
அதன்படி புனேவில் சஹாகர் நகரில் வைத்தார். அந்த ஏடிஎம்மின் உள்ளே தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சிலையை வைத்துள்ளார். ஒரு சிறப்பு கார்டை ஏடிஎம் மெஷில் செலுத்தினார் ஒரு குட்டி பிளாஸ்டிக் பாக்ஸுக்குள் மோதகம் வரும்.
#WATCH: An ATM (Any Time Modak) Ganesha has been installed in Sahakar Nagar, Pune for #GaneshChaturthi celebrations. #Maharashtra pic.twitter.com/GA2TVOgZKw
— ANI (@ANI) September 17, 2018
மேலும் அந்த இயந்திரத்தில் எண்களுக்கு பதிலாக மன்னிப்பது, தெய்வீகம், அன்பு, அமைதி, அறிவு உள்ளிட்டவை எழுதப்பட்டிருந்தன. இந்த ஒற்றை ஏடிஎம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.