For Quick Alerts
For Daily Alerts
Just In
உத்தரப்பிரதேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த ஜீப் மீது ரயில் மோதியது: 13 பேர் பலி
லக்னோ: ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடந்த வாகனம் மீது ரயில் மோதியதில் வாகனத்தில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ் மாவட்டத்தில் உள்ள ரயில்வே கேட் ஒன்றை இன்று காலை ஜீப் ஒன்று கடக்க முயற்சித்தது. அப்போது அந்த வழியில் வந்த ரயில், ஜீப் மீது மோதியது. இதில் உடல் சிதறி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்த போது வாகனம் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments
English summary
In Uttar Pradesh's Maharajkanch district 13 killed in a train accident. The accident took place today morning, while a zeep crossed an unmanned railway crossing, a train hit the zeep.
Story first published: Friday, May 9, 2014, 9:01 [IST]