For Daily Alerts
Just In
ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற ஜிது ராய்க்கு ரூ. 50 லட்சம் பரிசு- அகிலேஷ் யாதவ்
லக்னோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜிது ராய்க்கு ரூ50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய் பிஸ்டல் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று உள்ளார்.
ஜிது ராய் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வீரராவார். அவருக்கு உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் ரூ 50 லட்சம் ரொக்கபரிசும் அறிவித்து உள்ளார்.
English summary
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav has congratulated and announced a cash reward of Rs 50 lakh for the Lucknow-based ace shooter Jitu Rai for winning a gold in the 50m pistol event at the 17th Asian Games on Saturday.
Story first published: Saturday, September 20, 2014, 16:12 [IST]