For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்

உத்தரபிரதேசத்தில் கொடூரமான சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. கடைக்குப் போன தம்பதிகளை வண்டியில் இருந்து தள்ளிவிட்டு மரத்தில் கட்டி வைத்து கணவன் முன்னே நான்கு பேர் அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்து

Google Oneindia Tamil News

Recommended Video

    கணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம், வீடியோ வெளியிட்ட கும்பல்

    ராம்பூர்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேசத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தினசரி செய்தியாகி வருகின்றன. கடைக்குச் செல்லும் பெண்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. கடந்த வாரம் கணவனும் மனைவியும் பைக்கில் கடைக்குச் சென்ற போது வண்டியில் இருந்து இருவரையும் தள்ளி விட்டு விட்டு கணவன் கண் முன்னேயே அந்த பெண்ணை நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ந்து போன அந்த தம்பதியர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல நடவடிக்கைகளை எடுப்பதாக உத்தரபிரதேச மாநில அரசு கூறி வருகிறது. ஆனாலும் தினசரியும் கிராமங்களிலும் நகரங்களிலும் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 11ஆம் தேதி இரவு கணவனும் மனைவியும் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த கடைக்கு சென்றனர்.

    UP Rampur woman molested in front of husband - video viral

    அவர்களை வழிமறித்த நான்கு பேர் தகராறு செய்தனர். அதையும் மீறி அவர்கள் வண்டியை எடுத்த போது அந்த கும்பல் வண்டியோடு பிடித்து இருவரையும் தள்ளியது. இதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். இருவரையும் அந்த கும்பல் இழுத்துக்கொண்டு சென்றது. கணவனை மரத்தில் கட்டி வைத்தது. கணவன் கண் முன்னாலேயே அந்த பெண்ணை நான்கு பேரும் பலாத்காரம் செய்தனர்.

    அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் வரவே, அங்கிருந்த கும்பல் தப்பி ஓடியது. பாதிக்கப்பட்டவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அந்த விசயத்தை அவர்கள் மறந்து விட்டனர். இரு தினங்களுக்கு முன்பு அந்த தம்பதியினருக்கு இணையத்திலும், வாட்ஸ் அப் பேஸ்புக்கிலும் அதிர்ச்சி காத்திருந்தது. பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அதை வீடியோவாக எடுத்து அதை இணையத்திலும் வெளியிட்டிருந்தனர். இது வைரலாக பரவியது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    In a horrific incident, a woman was allegedly molested by four men in front of her husband here on June 11.The couple first did not approach the police. The miscreants posted video of the incident on social media, the victims rushed to the police and filed a complaint against the accused.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X