உ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ
உன்னவ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகள் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் உலா வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உன்னவ் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அமிரீஷ் மற்றும் கவுரவ் பிரதாப் சிங் ஆகியோர் கொலை, கொள்ளை வழக்குகளுக்காக கைதிகளாக உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிறையில் உலவும் காட்சிகள் வீடியோவாக வந்தது.
இது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது மட்டுமல்லாமல் கைதிகள் மதுவிருந்து கொண்டாட்டத்தை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் கவனத்துக்கு சென்றது.
Inmates at the Unnao jail seen in a viral video brandishing weapons and drinking liquor at the jail. AK Singh, Jail Superintendent (Picture 4) says, "A report on the incident has been sent to higher officials, strict action will be taken within 1-2 days," (26.6.19) pic.twitter.com/2FpGVN1PyQ
— ANI UP (@ANINewsUP) June 27, 2019
இந்த சம்பவம் குறித்து சிறையில் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சகம் கூறுகையில் கைதி கவுரவ் நல்ல ஓவியர். இவர் வீடியோவில் வைத்துள்ள துப்பாக்கி, களிமண்ணால் வரையப்பட்டது என தெரியவந்துள்ளது.
வீடியோவில் இருக்கும் உணவு பொருட்கள் வழக்கமாக கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்தானே தவிர வெளியே இருந்து வரவழைக்கப்பட்டவை அல்ல என தெரிவித்துள்ளது.