மாநகராட்சிக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் திமுக அதிரடி வழக்கு
டெல்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிற, 9 மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.
அதேநேரம், நகராட்சி, மாநகராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அப்போது, நடத்தவில்லை. இந்த நிலையில்தான், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி பாப்டே முன்னிலையில் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் திமுக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும், அதே நிலை ஏற்பட்டுள்ளது.