டிரான்ஸ்பர் கேட்டு வாக்குவாதம்- ஆசிரியரை தூக்கி ஜெயிலில் போட சொன்ன உத்தரகாண்ட் முதல்வர்-வைரல் வீடியோ
பணியிட மாறுதல் கேட்ட ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் உத்தரகாண்ட் முதல்வர்.
டேராடூன்: தமக்கு பணியிட மாறுதல் கேட்டு வாக்குவாதம் செய்த ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்.
டேராடூனில் பள்ளிக் கல்வித்துறைக்கான குறைதீர்ப்பு கூட்டமான ஜனதா தர்பார் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உத்தர பகுகுணா என்ற ஆசிரியையும் கலந்து கொண்டார்.
#WATCH Uttara Pant Bahuguna, the teacher who was suspended by #Uttarakhand CM Trivendra Singh Rawat after she argued with him yesterday over her transfer, breaks down while talking about the incident. pic.twitter.com/mex8Z4ofLl
— ANI (@ANI) June 29, 2018
இந்த நிகழ்ச்சியில் போலீசாரை தள்ளிவிட்டு முதல்வரை நோக்கி வேகமாக சென்றார் உத்தர பகுகுணா. முதல்வரிடம், கால் நூற்றாண்டு காலமாக தொலை தூர இடத்தில் பணிபுரிகிறேன். மாருதலே கிடைக்கவில்லை என அழுது புலம்பினார்.
#WATCH Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat directs police to take a teacher into custody after she protested at ‘Janata Darbar’ over issue of her transfer. CM Rawat suspended the teacher and asked her to leave. (28.06.18) pic.twitter.com/alAdCY74QK
— ANI (@ANI) June 29, 2018
அப்போது ஆவேசமாகவும் சில வார்த்தைகளுடன் அந்த ஆசிரியை பேசினார். இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் திரிவேந்திர ராவத், இவரை கைது செய்து ஜெயிலில் போடுங்க என போலீசாருக்கு உத்தரவிட்டார். அத்துடன் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாக பரவி வருகிறது.