For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் இறுதிச் சடங்கில் உருக்கம்.. அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் விட்ட மோடி!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அவரது இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டு அழுதார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வாஜ்பாயின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய போது கண் கலங்கிய மோடி- வீடியோ

    டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டு அழுதார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்தார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    Vajpayee Death: PM Modi bursts out and cries in the funeral

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    இன்று அவர் இறுதி சடங்கு நடந்தது. பிரதமர் மோடி, அத்வானி, அமித் ஷா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

    டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள யமுனை நதிக்கரையில் வைத்து வாஜ்பாய்க்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கில் முப்படை தளபதிகள் மரியாதை அளிக்கப்பட்டது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டு அழுதார். வாஜ்பாய் உடலை பார்த்து பிரதமர் மோடி கண்ணீர் விட்டார். ஸ்மிருதி ஸ்தலத்தில் வாஜ்பாய் உடலை இறக்கியபோது கண் கலங்கினார். இந்த சம்பவம் அங்குள்ளவர்களை கலங்க வைத்தது.

    English summary
    Former PM Vajpayee Death: PM Modi bursts out and cries in the funeral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X