For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்!

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் போராட்டம் நடக்கும் - வாட்டாள் நாகராஜ்- வீடியோ

    பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    7ஆம் தேதி போராட்டம்

    7ஆம் தேதி போராட்டம்

    இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

    போராட்டம் நடத்தப்படும்

    போராட்டம் நடத்தப்படும்

    தமிழகத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்று கொள்ள முடியாது என்று ஒன்றுபட்ட கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மாநிலம் தழுவிய பந்த்

    மாநிலம் தழுவிய பந்த்

    காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 10-ம் தேதி அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கூட்டமொன்று நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். அந்த கூட்டத்தில் மாநிலம் தழுவிய பந்த் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

    போராட்டம் அறிவிப்பு

    போராட்டம் அறிவிப்பு

    காவிரி மேலாண்மை ஆணையம் தங்களுக்கு தேவையில்லை என கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Vatal Nagaraj condemns Cauvery Management commission. He if Karnataka govt gives water to Tamil Nadu then Bandh will be conducts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X