காங். கூட்டணியில்தான் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வோம்: திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!!
கூட்டணி விவகாரத்தில் திமுகவுக்கு திருமாவளவன் பதிலட்டி கொடுத்துள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைந்துதான் லோக்சபா தேர்தலை விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் என திமுகவுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியால்தான் மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முடியும். லோக்சபா தேர்தலில் பாஜகவா, காங்கிரஸ் அணியா என்றுதான் பார்க்கப்படும்.
எங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோம். காவிரி பிரச்சனை குறித்து ராகுல் காந்தியிடம் பேசவில்லை.
வன்கொடுமை தடுப்புச் சட்ட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தந்ததற்காக ராகுலுக்கு நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு விடுத்தோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.