கொல்லத்தில் நிலச்சரிவு.. வாகனப் போக்குவரத்திற்குத் தடை!
Recommended Video
கொல்லம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் கொல்லத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்வது தடைபட்டுள்ளது.
கேரளாவில் பேய் மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மாநிலமே மூழ்கிப் போயுள்ளது. இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதையடுத்து கொல்லம் செல்லும் மற்றும் வரும் வாகனப் போக்குவரத்திற்கு கொல்லம் மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். அவசர கால வாகனங்கள் மட்டுமே மலைப் பாதையில் செல்ல முடியும். மற்ற வாகனங்கள் எல்லையுடன் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இடுக்கியிலும் தடை:
இதேபோல இடுக்கி மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக மாவட்டத்திற்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.