உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு!
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் தீபக் மிஸ்ரா என்பது மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்படியான கலகக் குரல் முதல் முறையாக எழுந்தது நாட்டை அதிர வைத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளின் எம்பிக்கள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டுவர வேண்டும் என வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சிகளின் இம்பீச்மென்ட் தீர்மானத்துக்கான நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்.