For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம் வழிபாட்டில் மசூதி அவசியமா? முக்கிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது.

இஸ்லாம் மார்க்கத்திற்கு மசூதி என்பது மிகவும் அவசியமானதா. அவர்களின் மார்க்கத்தில் மசூதி எவ்வளவு முக்கியம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோகன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடந்தது.

Verdict On Tomorrow: Will Ayodhya Case go to a Constitution Bench?

இந்த வழக்கு அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் துணை வழக்கு ஆகும். 1994ல் உச்ச நீதிமன்றம், மசூதிகளை இஸ்லாம் மதத்தின் மிக முக்கியமான இடமாக பார்க்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கு எதிராக அரசியல் சாசன அமர்வில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது. அதன்பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

இதை பொறுத்தே அயோத்தி விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் ஏற்படும். இதனால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த அயோத்தியா வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அயோத்தியா வழக்கு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்படுமா என்று தீர்ப்பளிக்கப்டும்.

English summary
Verdict On Tomorrow: Will Ayodhya Case go to a Constitution Bench?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X