For Daily Alerts
Just In
பணமூட்டைகளை கொள்கைகள் வென்றுவிட்டது: சரத் யாதவ் பெருமிதம்
பாட்னா: பீகார் தேர்தலில் பணமூட்டைகளுக்கு முன்பு கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளது என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி தோற்கடிப்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இது குறித்து ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் கூறுகையில்,
ஒரு பக்கம் பண மூட்டைகள், மறுபக்கம் கொள்கைகள். இது ஒரு கஷ்டமான போட்டி ஆகும். தற்போது கொள்கைகள் பணமூட்டைகளை வென்றுள்ளது. பீகார் மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்.
ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெறவது உறுதியாகிவிட்டதையடுத்து அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
English summary
With trends putting the grand alliance ahead of the BJP-led NDA, JD(U) chief Sharad Yadav described it as a "victory of principles over moneybags", asserting that the Nitish Kumar-led grouping will win close to 150 seats.
Story first published: Sunday, November 8, 2015, 13:52 [IST]