துணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி.. ப.சிதம்பரத்திற்கு கெஜ்ரிவால் நன்றி
துணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் டெல்லி அரசு சார்பாக வாதாடியதற்காக, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் நேற்று இரவு சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: துணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் டெல்லி அரசு சார்பாக வாதாடியதற்காக, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் நேற்று இரவு சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அதன் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்டு பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது. இதனால் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
அதன்படி டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. துணை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. அவர்களால் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்றுள்ளது.
இந்த வழக்கில், டெல்லி அரசு சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆஜராகி இருந்தார். அதேபோல் இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவான், சுப்பிரமணியம், ஆகிய வழக்கறிஞர்களும் ஆஜராகி இருந்தனர். துணை நிலை ஆளுநரின் செயலுக்கு எதிராக இவர்களே ஆதாரங்களை வழங்கியது.
இந்த நிலையில் வழக்கில் வென்றதற்காக, ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு நேற்று இரவு சென்று கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் மற்ற மூன்று வழக்கறிஞர்களையும் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.