இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்!
சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
கொல்லம்: சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
|
ரசிகர் படை
எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்படி அவரது படத்தை கொண்டாடுவார்களோ அதேபோல் கேரளா ரசிகர்களும் அவருக்கு பெரிய பெரிய கட் அவுட் வைத்து கொண்டாடி வருகிறார்கள். கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய தொண்டர் பலம் இருக்கிறது. இதனால் அங்கும் கொண்டாட்டமும் மெர்சலாக உள்ளது.
|
சாதனை
இந்த நிலையில்தான் கேரளாவின் கொல்லம் பகுதியில் விஜயின் சர்கார் படத்தை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் சினிமாவுக்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட் அவுட் ஆகும். இது 53 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|
எல்லோரும் வந்தனர்
இந்த நிலையில் இந்த கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கும் பகுதி பெரிய வைரலாகி உள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், துல்கருக்கு கூட இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது இல்லை. இதை பார்க்கவே பல பகுதியில் இருந்து மக்கள் அங்கு குவிந்து இருக்கிறார்கள்.
|
நீக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த கட் அவுட் தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. கொல்லம் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் இந்த கட் அவுட் நீக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இப்படி நீக்குவதாக கொல்லம் விஜய் ரசிகர் மன்றமே தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் விஜய் ரசிகர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.