அநாகரீகத்தின் உச்சம்... டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணப்படம் எடுத்த இளைஞர்!
விஜயவாடா: ஆந்திராவில் டாக்டராக நடித்து, பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்ற பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அப்பெண்ணின் வார்டுக்கு ராமகிருஷ்ணா என்பவர் ஒருவர் வந்துள்ளார். உதவி டாக்டர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட அந்த இளைஞர், சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த அப்பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக தனது செல்போனில் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த நர்ஸ் ஒருவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த இளைஞரிடம் அவர் நடத்திய விசாரணையில் அவர் டாக்டர் இல்லை என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து உதவி கேட்டு நர்ஸ் கூச்சல் போடவே, மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து, அந்த இளைஞரை வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த இளைஞர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் வேடத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.