பிரபல நடிகருடன் சச்சின் மகள் சாரா எடுத்த செல்ஃபி.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ஹாட்
சாரா மற்றும் ரன்வீர்சிங் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என பலரும் முனுமுனுக்கிறார்கள்.
மும்பை: கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்களும், பெண்களும் அடித்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் சச்சினை காருக்கு வெளியே நின்றபடியே செல்ஃபி எடுத்த ரசிகர்களிடம் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுமாறு, அறிவுரை கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், சச்சின் மகள் சாராவுக்கோ வேறு ஒருவரோடு செல்ஃபி எடுக்கத்தான் ஆசை. அது வேறு யாருமல்ல, வட நாட்டு பெண்களின் கனவு கண்ணன் ரன்வீர் சிங்தான்.
தற்போது பத்மாவதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் முகலாய மன்னர் வேடத்தில் அவர் நடிக்கிறார். ஹீரோயின் இந்து ராணி பத்மாவதி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் உள்ளதாக சந்தேகித்த ஒரு இந்துத்துவா அமைப்பு சமீபத்தில் படப்பிடிப்பில் கலாட்டா செய்திருந்தது நினைவிருக்கலாம்.
சாரா மற்றும் ரன்வீர்சிங் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என பலரும் முனுமுனுக்கிறார்கள். ஆனால் இது ஒரு தூய்மையான நட்பு அடிப்படையிலான போட்டோ என சச்சின் தரப்பில் கூறுகிறார்களாம்.