பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ள துடித்த தந்தை.. நடுரோட்டில் சரமாரி அடி.. பதை பதைக்க வைக்கும் வீடியோ
மகளை விபச்சாரத்துக்கு தள்ள முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
நாகோன்: பெற்ற மகளை விபச்சாரத்திற்கு அனுப்ப டார்ச்சர் செய்கிறார் தந்தை.. விபச்சாரம் செய்ய மறுத்த மகளை, நடுத்தெருவில் இழுத்து கொண்டு வந்து, அவளது ஆடைகளை கிழித்து, கண்மூடிதனமாக தாக்கும் இந்த தகப்பனின் கொடூர வீடியோதான் வைரலாகி வருகிறது.
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டம் மொவமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமாலுதீன். கூலி வேலை செய்து வருகிறார். 15 வயது மகள் இருக்கிறாள்.
ஜமாலுதீனுக்கு பாலியல் தொழில் செய்யும் கும்பலுடன் தொடர்பு உள்ளது. இதனால் தனது 15 வயது மகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு ஜமாலுதீன் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ஜமாலுதீன் அம்மாவும் உடந்தை.
பாட்டி
தந்தையும், பாட்டியும் சிறுமியை தினமும் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். ஆனால், சிறுமி இதற்கு தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்றும் இப்படி ஒரு பிரச்சனை வீட்டில் ஏற்பட்டுள்ளது. சிறுமி வழக்கம்போல மறுக்கவும், ஆத்திரமடைந்த தந்தை, தெருவுக்கு இழுத்து வந்தார் சிறுமியை.
அரை நிர்வாண கோலம்
அங்கே ஊர் மக்கள் முன்னிலையில், சகட்டுமேனிக்கு அந்த பிஞ்சுவை அடித்து உதைத்தார். அப்பா அடித்ததில், மகளின் துணியெல்லாம் கிழிந்து தொங்கி.. அரை நிர்வாண கோலத்துக்கு ஆளானாள். வெறித்தனமாக மகளை புரட்டி புரட்டி எடுத்ததில், அவள் மயங்கியே விழுந்துவிட்டாள். அப்பவும் தந்தை விடவில்லையே,., பாட்டி உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து வந்து மகனிடம் தந்து இன்னும் அடிக்க சொல்கிறார்.
|
புகார்
இவ்வளவு நடந்தும், அந்த கிராம மக்கள் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, ஒருத்தருமே வந்து இந்த தாக்குலை தடுக்கவில்லை.. ஜமாலுதீனையும் ஏன் என்று கேட்கவில்லை. இந்த கொடூர காட்சி வீடியோவாக வெளிவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் சமகுரி போலீசில் புகார் அளிக்கவும், ஜமாலுதீன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரொம்பவும் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரி ஐசியூவில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை நடந்து, தற்போது சிறுமி உடல்நலம் தேறி உள்ளாள்.
|
வாக்குமூலம்
போலீசில் ஜமாலுதீன் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு விபச்சார தொழில் செய்யும் கூட்டத்துடன் நல்ல நெருக்கம் உள்ளது. எனக்கு மொத்தம் 3 மனைவிகள். இந்த 3 பேரையுமே பாலியல் தொழிலில் ஈடுபட சொன்னேன்... அவர்கள் மறுத்துவிட்டனர்.. என் தொல்லை தாங்காமல், 3 பேருமே டைவர்ஸ் வாங்கி சென்றுவிட்டனர்" என்று சொன்னதை கேட்டதும், போலீசார் அதிர்ச்சியாகி விட்டனர்.