மாட்டிக்கிச்சே.. மாட்டிக்கிச்சே.. கோவிலுக்கு போனா சாமி மட்டும் கும்பிடணும்.. இல்லாட்டி இப்படித்தான்
யானையின் சிலைக்கு அடியில் ஒரு பெண் சிக்கி கொண்டார்
Recommended Video
காந்திநகர்: இந்த அம்மாவுக்கு ஆசைக்கு ஒரு அளவு வேணாமா.. கோயிலுக்கு வந்தோமா சாமியை கும்பிட்டு வீடு போய் சேர்ந்தோமான்னு இல்லாம.. தேவையில்லாத வேலையை செஞ்சு.. நாட்டு மக்களிடம் கேவலப்பட்டு கொண்டதுதான் மிச்சம்!
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில், நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு ஒரு பெண்மணி செல்கிறார். சற்று பருமனான உருவம்.. கோயிலுக்குள் யானை சிலை உள்ளது.
சிலையை கும்பிட்டு செல்லாமல், அதனுடன் சேர்ந்து போட்டோ எடுக்க ஆசைப்பட்டார். யானைக்கு பக்கத்தில் நின்றாலாவது பரவாயில்லை.. யானையின் கால்களுக்கு அடியில் உள்ளே நுழைந்து படுத்துகொண்டு சைட்-போஸ் கொடுத்தார்.
இதன்பிறகுதான் காமெடியே.. யானைக்கு இந்த பக்கம் பெண்ணின் தலை, அந்த பக்கம் உடம்பு! கடைசியில் எந்த பக்கமும் இவரால் வெளியே வரமுடியவில்லை. உடம்பு குண்டு என்பதால் யானையின் கால்களுக்கு அடியில் மாட்டிக் கொண்டார்.
வாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்!
சிரித்து கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்தவருக்கு, இப்போது பயம் ஒட்டிக் கொண்டது. முகமெல்லாம் டென்ஷன்.. எவ்வளவோ முயற்சித்தும் அவரால் வெளியே வரவே முடியவில்லை. பிறகு அங்கிருந்த பக்தர்கள் ஆளுக்கொரு பக்கம் இந்த பெண்ணை வெளியே இழுக்க முயற்சித்தனர்.
அவரது காலை கொஞ்சம் பேர், தலையை கொஞ்சம் பேர் என இழுத்து பிடித்து எப்படியோ வெளியே கொண்டுவந்து விட்டனர். அந்த சின்ன யானைக்குள் பெரிய உடம்பு மாட்டி தவித்த பெண்ணின் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. நல்லவேளை.. யானைக்கு எதுவும் ஆகலை!