பிரதமர் மோடியை சந்தித்த கோஹ்லி -அனுஷ்கா ஜோடி.. திருமண வாழ்த்து பெற்றனர்!
பிரதமர் மோடியை சந்தித்து கோஹ்லி -அனுஷ்கா தம்பதி திருமண வாழ்த்து பெற்றுள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடியை சந்தித்து கோஹ்லி -அனுஷ்கா தம்பதி திருமண வாழ்த்து பெற்றுள்ளனர். பிரதமர் இல்லத்திற்கு சென்ற அவர்கள் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
தற்போது தேனிலவு முடித்து இந்தியா திரும்பி இருக்கும் இந்த தம்பதி இன்று பிரதமர் இல்லத்திற்கு சென்றனர். பிரதமர் மோடியை சந்தித்து தங்களது திருமணத்திற்கு வாழ்த்து பெற்றனர். மோடி அவர்களை வாழ்த்தி இருக்கிறார்.
Virat Kohli and Anushka Sharma met PM Modi this evening. Prime Minister congratulated them on their wedding: PMO pic.twitter.com/cuPoBGQTuJ
— ANI (@ANI) December 20, 2017
மேலும் பிரதமர் மோடியிடம் தங்கள் திருமண வரவேற்பிற்கான பத்திரிக்கையை அளித்தனர். வரும் 26 ஆம் தேதி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் கலந்தும் கொள்ளும் கோஹ்லி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடக்கவுள்ளது.