ரூபாய் நோட்டு அறிவிப்பு.. சேவாக் மாதிரியே பேசும் விராட் கோஹ்லி
விசாகபட்டினம்: 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். சேவாக், ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிரோடு வந்ததை நினைவில் கூர்ந்து டிவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியும் பிரதமர் மோடியின் இந்த செயல் இதுவரை யாரும் செய்திடாத மிக துணிச்சலான செயலை செய்து வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ள மோடியின் இந்த செயல் தான் கருப்பு பணத்திற்கெதிரான சிறந்த சிக்ஸர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ராஜ்கோட்டில் இருந்து கிளம்பும்போதே பழைய ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்து போட்டு அதை ரசிகர்களிடம் கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.