"வருங்கால மாமியாரை"ச் சந்தித்த அனுஷ்கா... ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் உருகிய கோஹ்லி
மும்பை: விராத் கோஹ்லியின் பெற்றோரை அனுஷ்கா சர்மா டெல்லிக்குப் போய்ப் பார்த்துப் பேசியுள்ளார். அதேபோல விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவை அவரது படப்பிடிப்பு நடைபெறும் செட்டுக்குப் போய் மனம் விட்டு பேசி விட்டு வந்துள்ளாராம்.
உருகி உருகி காதலித்த ஜோடி அனுஷ்கா சர்மா, விராத் கோஹ்லி. ஆனால் இடையில் திடீரென இந்த ஜோடி பிரிந்தது.
தனது வேலையில் விராத் கோஹ்லி தலையிடுவதை விரும்பாததால் அனுஷ்கா பிரிந்து விட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
மீண்டும் காதல்...
இந்த நிலையில் மீண்டும் இந்த ஜோடிக்குள் இருந்த காதல் பூத்து வெளியே வந்தது. மறுபடியும் தொடங்கியது காதல் கதை.
பெற்றோருடன் சந்திப்பு...
இப்போது மீண்டும் இருவரும் நெருக்கமாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் புடாபெஸ்ட் போயிருந்தார் அனுஷ்கா. அங்கிருந்து திரும்பியதும் அவர் டெல்லி சென்று கோஹ்லியின் பெற்றோரைப் பார்த்துப் பேசினார்.
கோஹ்லியின் வருகை...
அதனைத் தொடர்ந்து மும்பை திரும்பிய அவர் தான் தயாரித்து வரும் பில்லாரி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார். இந்த நிலையில்தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு விராத் கோஹ்லி திடீரென வந்துள்ளார்.
ஹேப்பி...
அவரது வருகையால் உற்சாகமடைந்தாராம் அனுஷ்கா. இருவரும் சிறிது நேரம் தனியாகவும் அமர்ந்து மனம் விட்டுப் பேசினராம். பின்னர் அங்கிரு்நது புறப்பட்டுப் போயுள்ளார் கோஹ்லி.