For Daily Alerts
Just In
இந்தியாவின் பாதுகாப்பே எங்களுக்கும் பாதுகாப்பு – இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேரா
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுடன் இலங்கை நல்ல நட்புறவுடன் உள்ளது. கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு குறைபாட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு. சீனா மட்டுமல்லாது ரஷ்யாவுடனும், இலங்கை நட்புறவுடனே இருக்கிறது. இது வர்த்தக ரீதியான நட்பு மட்டுமே தவிர எந்தவித ராணுவ உடன்பாடும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை தளபதியின் அழைப்பை ஏற்று, இலங்கை கடற்படை தளபதி கடந்த 25 ஆம் தேதி டெல்லி வந்தார். இரண்டு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பாக இலங்கை கடற்படை தளபதி வருகை அமைந்திருந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
Vice Admiral Jayantha Perera, Commander of the Srilanka Navy is on an official visit to India from 26 to 30 October 2014. The visiting Chief was accorded a Guard of Honour on his arrival at the South Block.
Story first published: Tuesday, October 28, 2014, 8:38 [IST]