For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் பாதுகாப்பே எங்களுக்கும் பாதுகாப்பு – இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேரா

Google Oneindia Tamil News

Visit of Commander of Srilanka Navy Chief Vice Admiral Jayantha Perera
டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு என்று இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேரா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுடன் இலங்கை நல்ல நட்புறவுடன் உள்ளது. கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு குறைபாட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு. சீனா மட்டுமல்லாது ரஷ்யாவுடனும், இலங்கை நட்புறவுடனே இருக்கிறது. இது வர்த்தக ரீதியான நட்பு மட்டுமே தவிர எந்தவித ராணுவ உடன்பாடும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை தளபதியின் அழைப்பை ஏற்று, இலங்கை கடற்படை தளபதி கடந்த 25 ஆம் தேதி டெல்லி வந்தார். இரண்டு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பாக இலங்கை கடற்படை தளபதி வருகை அமைந்திருந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Vice Admiral Jayantha Perera, Commander of the Srilanka Navy is on an official visit to India from 26 to 30 October 2014. The visiting Chief was accorded a Guard of Honour on his arrival at the South Block.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X