For Daily Alerts
Just In
எல்லையில் பதற்றம்.. வாகா கொடி மரியாதையை இன்று ரத்து செய்தது இந்தியா
டெல்லி: பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இன்று வாகா கொடி மரியாதையையும் இந்தியா ரத்து செய்துள்ளது.
காஷ்மீரில் உள்ள யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது விமானப் படை தாக்குதலை நடத்தியது. இதில் பலத்த உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வழக்கமாக நாள்தோறும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறும் கொடி மரியாதையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது.
Comments
English summary
Wagah border flag ceremony have been cancelled today by the Indian government.