For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியது

காவிரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நிரம்புகிறது மேட்டூர் அணை...மகிழ்ச்சியில் மக்கள்- வீடியோ

    பெங்களூர்: காவிரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியது.

    தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.

    Water Flow increased in Cauvery: 45,000 cubic feet of water released from Karnataka

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது இதனால் கபினியிலிருந்து 46 ஆயிரத்து 250 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உள்ளது. வெளியேற்றும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது. 10 மாதத்திற்கு பின் மேட்டூரில் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது.

    விரைவில் மேட்டூர் அணை 80 அடியை எட்டும் என கூறப்படுகிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது . அணையின் நீர் இருப்பு 37.48 டிஎம்சியாக இருக்கிறது.

    English summary
    Water Flow increased in Cauvery: 45,000 cubic feet of water released from Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X