டெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்
கொல்கத்தா: டெல்லி மோதல்களுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தனமே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியில் வன்முறை வெடித்து போர்க்களமானது. இச்சம்பவம் தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:
டெல்லியில் நடைபெற்ற சம்பவம் பெரும் துயரத்தைத் தருகின்றன. விவசாய சகோதர, சகோதரிகள் தொடர்பான மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் இதற்கு காரணம்.
முதலில் விவசாயிகளின் ஒப்புதல்களைப் பெறாமலே மத்திய அரசு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. டெல்லியில் 2 மாதங்களாக போராடிய போதும் அலட்சியமாக இருந்தது மத்திய அரசு.
டெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்
போராடுகிற விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி சீர்குலைவு சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.