ராஜஸ்தான், மே.வங்கத்தில் 3 லோக்சபா, 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு
ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 லோக்சபா, 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
ஜெய்ப்பூர்/கொல்கத்தா: ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் 3 லோக்சபா மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானின் ஆல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தின் உலுபேரியா லோக்சபா தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல் ராஜஸ்தானின் மண்டல்கார், மேற்குவங்கத்தின் நோபரா சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
ராஜஸ்தான் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேற்கு வங்க இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.
முதல் முறையாக வாக்காளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்கு இயந்திரங்கள் இந்த இடைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 1-ந் தேதி எண்ணப்படுகிறது.