For Daily Alerts
Just In
பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மத்திய அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது.
இந்தியாவில் பட்டினி, ஊழலை களைய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைத்திருக்கிறோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி காலத்தில் விவசாயத் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைத்துள்ளது. கிராமப்புற வளர்ச்சி தொடர்பாக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ன.
பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
Comments
English summary
Addressing media persons at the National Media Centre here, PM Manmohan sing Singh said: "Over the past decade, we have been through many ups and downs. During my first term in office, India witnessed for the first time in its recorded history a sudden acceleration of economic growth to 9.0 per cent."
Story first published: Friday, January 3, 2014, 12:56 [IST]