'பி.ஆர்' வேலை பார்ப்பதில்தான் நாம் 'வீக்', ஆனால் மக்கள் சேவையில் 'சூப்பர் ஹீரோ' - குலாம் நபி ஆசாத்
டெல்லி: பி.ஆர். திறமை நமக்கு சரியாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ்தான் எப்போதுமே சூப்பர் ஹீரோ என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்.
டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு குலாம் நபி ஆசாத் பேசுகையில், ஐக்கிய முற்போகுக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக நாம் நிறையச் செய்துள்ளோம்.
நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இன்று நல்ல சாலைகள் உள்ளன. எந்த அரசு இப்படிச் செய்துள்ளது.
முதல் முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கிராமங்களில் பள்ளிகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
பல கிராமங்களில் இன்று நல்ல கல்வி வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 வருடங்களில் 52,000 மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 4 வருடங்களில் எம்.டி, எம்.பி.பி.எஸ், சீட்டுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
நாம் பி.ஆர். வேலையில் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மக்களுக்காக சேவை செய்வதில், எப்போதுமே காங்கிரஸ்தான் சூப்பர் ஹீரோ என்றார் குலாம் நபி ஆசாத்.