பாக். & சீனாவின் நிலம் எங்களுக்கு வேண்டாம்.. அமைதிதான் வேண்டும்.. மத்திய அமைச்சர் கட்கரி பேச்சு!
காந்தி நகர்: பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நிலம் எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு அமைதிதான் வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையே இன்னும் எல்லை பிரச்சனை முடிவிற்கு வரவில்லை. லடாக்கில் கடந்த மே 5ம் தேதியில் இருந்து சீனா எல்லை மீறி வருகிறது. எவ்வளவு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கூட பாங்காங் திசோ பகுதியில் சீனா அத்துமீறலை நிறுத்தவில்லை.
அதேபோல் இன்னொரு பக்கம் இந்தியாவின் லிபுலேக், கல்பானி உள்ளிட்ட பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி மேப் வெளியிட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானும் எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் இப்படி வரிசையாக நிறைய பிரச்சனைகள் இருந்து வருகிறது.
பலூனால் வந்த வினை.. தென் கொரியா மீது ராணுவ தாக்குதல்.. கிம் ஜோங் உன் தங்கை முடிவு.. பரபரப்பு!
நிதின் கட்கரி
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று குஜராத்தில் ஆன்லைன் மூலம் நடத்திய பிரச்சார கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார். இந்தியாவின் எல்லை பிரச்சனை குறித்து பேசினார். அதில், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்பும் நாடு. பேச்சுவார்த்தை மூலம் உள்நாட்டு மட்டும் எல்லை பிரச்னையை சரி செய்வதுதான் எங்களின் மிகப்பெரிய சாதனை ஆகும்.
வெற்றி பெற்றோம்
மாவோயிஸ்ட் பிரச்சனை தொடங்கி எல்லை பாதுகாப்பு பிரச்சனை, பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனை என்று பல விஷயங்களை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். எங்களுக்கு இதில் எல்லாம் வன்முறை, தாக்குதல் நோக்கம் இல்லை. இதில் எங்களுக்கு அமைதிதான் நோக்கம். இந்தியாவின் நிலத்தை விரிவாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இந்தியாவின் வலிமையை உயர்த்துவதுதான் எங்களுக்கு நோக்கம்.
அமைதி முக்கியம்
அமைதியை நிலைநாட்டும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்குவதுதான் எங்கள் நோக்கம். அண்டை நாடுகளுடன் நாங்கள் இப்படித்தான் அமைதியான பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறோம். வங்கதேசம் பிறந்த போதில் இருந்தே அவர்களுடன் நல்ல உறவை நாங்கள் பேணி வருகிறோம். 1971 போருக்கு பின் எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
நிலம் வேண்டாம்
எங்களுக்கு பிற நாடுகளின் நிலம் வேண்டாம். நாங்கள் எப்போதும் சீனா அல்லது பாகிஸ்தானின் சின்ன நிலத்தை கூட நாங்கள் கேட்டது இல்லை. நாங்கள் கேட்பது எல்லாம் அமைதிதான். அமைதி , அன்பு, ஒற்றுமை, ஒற்றுமையாக பணிகளை செய்வதுதான் எங்கள் நோக்கம். பிற நாடுகளுடன் சண்டை போடுவது எங்கள் நோக்கம் கிடையாது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.