அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்... ஆர்.எஸ்.எஸ். மோகன்பகவத் தடாலடி!
ஜெய்ப்பூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் அரியணை ஏறியுள்ளது. இந்த ஒரு சில நாட்களிலேயே மாட்டிறைச்சி விவகாரம், ஜெய்ஶ்ரீராம் முழக்கம் என பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம். ராமர் கோவிலை கட்டுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். அனைவரும் இணைந்து ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்றார்.
6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்.. ஆட்சியை கவிழ்க்க புதிய பிளான்!
ராமர் கோவில் இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மோகன் பகவத்தின் பேச்சு சர்ச்சையாகி உள்ளது.